tamilni 314 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருவரின் தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டுக்கள் மாயம்

Share

இலங்கையில் இருவரின் தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டுக்கள் மாயம்

போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டுகள் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டதன் பின்னர், இருவரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, ​​இந்த இரண்டு தொலைபேசிகளும், ஆவணங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரிடம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்த இந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் இரண்டு கடவுச்சீட்டுகளும் எப்போது காணாமல்போனது என்பது தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.

இந்த தொலைபேசிகளில் முக்கியமான காணொளிகள், பல்வேறு போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் தொலைபேசி எண்கள் போன்றவை இருந்ததாக குற்றப் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
articles2Fa5gVbadaZHsNNRaO5GvG 1
செய்திகள்அரசியல்இலங்கை

தரம் 06 கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைப்பு: ஆசிரியர் சங்கங்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி அறிவிப்பு!

ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையின் கீழ், 06 ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம்...

Best Fuel Cards for Small Businesses
செய்திகள்அரசியல்இலங்கை

அரச வாகனங்களுக்கு இனி டிஜிட்டல் கார்டு: முறைகேடுகளைத் தவிர்க்க அமைச்சரவை அதிரடி அனுமதி!

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், புதிய...

1768301444 WIMAL 6
செய்திகள்அரசியல்இலங்கை

விமல் வீரவன்சவின் போராட்டம் வெற்றி: தரம் 6 கல்விச் சீர்திருத்தங்களை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு!

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக...

images 7 3
உலகம்செய்திகள்

ஈரானில் இரத்தக்களரியாகும் போராட்டங்கள்: 2,000 பேர் உயிரிழப்பு; முதல்முறையாக ஒப்புக்கொண்டது அரசு!

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில், உயிரிழந்தவர்களின்...