8f481d7b47
செய்திகள்இலங்கை

நாட்டு மக்களிடம் அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Share

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆகவே சில வாரங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியஇராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன  இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு மகத்தான சாதனையாகும்.

சமுதாயத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருகின்ற தற்போதைய நிலைமையை பேணுவதே நாம் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் செயற்பாடாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் இந்த நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், வரவிருக்கும் சில வாரங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அவர் நாட்டு மக்களை கோரியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
13 11
செய்திகள்உலகம்

ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்: நான்கு வீரர்கள் உயிரிழப்பு – அமெரிக்க இராணுவம் உறுதி!

மேற்கு ஈராக் வான்பரப்பில், அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘போயிங் KC-135 Stratotanker’ ரக எரிபொருள் நிரப்பும்...

12 12
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மோதல்கள் மற்றும் அவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைக்...

11 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகம்: ஐந்து மாதங்களில் மீள்நிர்மாணப் பணிகள் நிறைவு!

டித்வா (Ditwah) புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலத்த சேதமடைந்த கண்டி நீதிமன்ற...

10 12
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்று உத்தரவு!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும்,...