tamilni 358 scaled
இலங்கைசெய்திகள்

அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு

Share

அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஹரீனுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து சட்ட ஆலோசனை பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவின் ஒர் பகுதியே என அண்மையில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தக் கூற்று தொடர்பிலேயே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்து அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற போது செய்து கொள்ளப்பட்ட சத்தியப் பிரமாணம் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...