tamilni 45 scaled
இலங்கைசெய்திகள்

அதிகாரிகளை எச்சரித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர்

Share

அதிகாரிகளை எச்சரித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர்

அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் மாவட்ட செயலாளர்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமன் ஏக்கநாயக்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.

நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் அனைத்து முக்கிய பொறுப்புள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை சில குழுக்கள் தாமதப்படுத்துவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

நிவாரண திட்டத்தை பெறாதவர்களுக்கான மேல்முறையீடுகள் மற்றும் புதிய பதிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், கொடுக்கப்பட்ட இலக்கில் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் 100% பூர்த்தி செய்துள்ளதாகவும் மற்றொருவர் 20% இலக்குடன் பூர்த்தி செய்துள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி இடம்பெற கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...