kovil 1
இலங்கைசெய்திகள்

சுகாதார விதி மீறிய கும்பாபிஷேகம்! – மேலும் 25 பேருக்கு தொற்று

Share

ஊரடங்கு வேளையில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வெளியான நிலையில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில் சுமார் 100 பேர் வரையில் வசித்துவரும் நிலையில் மொத்தமாக 38 பேர் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். இதனால் குறித்த கிராமம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறியுள்ளது. சுகாதார நடைமுறைகளை அவதானமான பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...