kovil 1
இலங்கைசெய்திகள்

சுகாதார விதி மீறிய கும்பாபிஷேகம்! – மேலும் 25 பேருக்கு தொற்று

Share

ஊரடங்கு வேளையில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா – நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வெளியான நிலையில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில் சுமார் 100 பேர் வரையில் வசித்துவரும் நிலையில் மொத்தமாக 38 பேர் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். இதனால் குறித்த கிராமம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறியுள்ளது. சுகாதார நடைமுறைகளை அவதானமான பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...