tamilnaadi 34 scaled
இலங்கைசெய்திகள்

50000 புதிய வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை

Share

50000 புதிய வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதன் கீழ் 5000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அதிகாரம், அரச சேவை மற்றும் தனியார் துறையினரின் உதவியுடன் இந்த சேவை மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சனச அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அமைச்சின் சகல ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாகவும், அதற்கான செயற்பாடுகளையும் தாம் முன்னெடுப்பதாகவும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

விவசாயம், மீன்பிடி, சுயதொழில், தொழில் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி, கைத்தொழில், கால்நடை, உற்பத்தி, காணி துறை, மனிதவள மேம்பாடு, மாற்று எரிசக்தி உள்ளிட்ட பல சுயதொழில் சேவைகள் மூலம் கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் மக்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் கிடைக்கப்பெறுவதால் பிரச்சினையின்றி உரிய தொழில்களில் ஈடுபட முடியும் எனவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...