tamilni 379 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள படுகொலைகள்

Share

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள படுகொலைகள்

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குவாதத்தால் 03 கொலைகளும், 02 மரணங்களும் சந்தேகத்திற்குரிய முறையில் பதிவாகியுள்ளன.

கடந்த 15ஆம் திகதி கொழும்பு ரண்தெனிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கடந்த 20ஆம் திகதி தெலிஜ்ஜவில பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஜீப்பில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...