tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

தந்தையானாரா சஜித்…!

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாச தம்பதியினர் குழந்தைச் செல்வமொன்றை பெற்றெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த சமிந்த விஜேசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் சஜித் பிரேமதாச, மாலை வேளையில் சீக்கிரமே வீடு சென்று விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைச் செல்வத்துடன் கொஞ்சி விளையாடும் நோக்கில் அவர் வீடு செல்வதாக சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் வீதியில் இருக்கும் பிள்ளைகளை அள்ளி முத்தமிட்ட போதிலும் அவர்களுக்கு நலன்களை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாச நாட்டின் பிள்ளைகளுக்கு தந்தையாக முடியும் என்பதனை நிரூபித்து, குழந்தைச் செல்வத்திற்கு தந்தையாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி துறப்பு குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு பிள்ளைச் செல்வம் கிடையாது என்பது அரசியல் மேடைகளில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தை பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தனர்.

சஜித் மற்றும் ஜலனி தம்பதியினருக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தமை தொடர்பில் அவர்களது தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...

11 20
செய்திகள்உலகம்

ஈரானுக்கு எதிரான போரில் உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறைகூவல்!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்...

10 19
உலகம்செய்திகள்

சுலோவீனியாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு: வாகனங்களுக்கு 50 லீற்றர் மாத்திரமே வழங்கக் கட்டுப்பாடு!

உக்ரைன் – ரஷ்ய போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் சங்கிலி பாதிப்பு மற்றும் எல்லை...

09 19
செய்திகள்உலகம்

ஈரானில் வரலாறு காணாத இணைய முடக்கம்: 23 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள 90 மில்லியன் மக்கள்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகளின் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களைத் தொடர்ந்து,...