tamilnih 14 scaled
இலங்கைசெய்திகள்

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

விவசாய கைத்தொழில் துறையில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து தொழிலாளர்களுக்கும் காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பிய பின்னர் விவசாய தொழில்முனைவோராக மாற்றுவதற்கு காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் விவசாய கைத்தொழில் துறை தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெற்ற அறிவின் ஊடாக இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் வகையில் இந்த காணிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் இலங்கையின் விவசாய கைத்தொழில் துறையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் விவசாயத்துறையுடன் தொடர்புடைய புதிய வர்த்தகர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் அமைவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...