ஹேமந்த ஹேரத் 666
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி நிலையங்கள் தொடர்ந்து இயங்காது!!!! – அமைச்சு அறிவுறுத்து

Share

எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும். அதனால் அருகில் உள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் சென்று தடுப்பூசிகளை பெறுமாறு நட்டு மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு தொடர்ந்து தடுப்பூசி நிலையங்களை இயங்கவைக்க முடியாது. அதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு காலக்கெடு வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் வீடுகளுக்கு அருகில் சென்று தடுப்பூசி போடுவதற்கு பதிலாக ஒரு சில முக்கிய மையங்களில் மட்டுமே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

எனவே கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகளை விரைவில் பெறுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...