rtjy 104 scaled
இலங்கைசெய்திகள்

வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு தாக்குதல்

Share

வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு தாக்குதல்

பலபோவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி பலபோவ பிரதேசத்தில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை வாளால் தாக்கி பலத்த காயப்படுத்தி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், சந்தேக நபரை வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

நீண்ட நாள் தகராறு ஒன்றின் அடிப்படையிலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கை பரிசீலனை செய்த அத்தனகல்ல நீதிமன்ற நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...