rtjy 76 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

Share

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது.

குறித்த யோசனைக்கு பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 13 பேர் தீர்மானத்திற்கு வாக்களித்த போதிலும் அமெரிக்கா அந்த யோசனையை வீட்டோ செய்துள்ளது.

பிரான்ஸ், ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நிரந்தர உறுப்பினர்களுடன் உடனடி போர் நிறுத்தத்திற்கு வாக்களித்ததோடு ஐக்கிய இராச்சியம் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரிதாகப் பயன்படுத்தப்படும் பிரிவு 99 ஐப் உபயோகப்படுத்தினார்.

இதன்படி, காஸாவில் மனிதாபிமான அமைப்பின் சரிவு மற்றும் “மனிதாபிமான பேரழிவை” தடுக்க பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 97 க்கும் மேற்பட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இந்நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இதுவரை 17,500 பேர் உயிரிழந்துள்ளனர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேலும், இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் பெல்ஜியம், ஸ்லோவேனியா, ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, போலந்து மற்றும் போர்த்துக்கல் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...