rtjy 76 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

Share

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது.

குறித்த யோசனைக்கு பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 13 பேர் தீர்மானத்திற்கு வாக்களித்த போதிலும் அமெரிக்கா அந்த யோசனையை வீட்டோ செய்துள்ளது.

பிரான்ஸ், ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நிரந்தர உறுப்பினர்களுடன் உடனடி போர் நிறுத்தத்திற்கு வாக்களித்ததோடு ஐக்கிய இராச்சியம் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரிதாகப் பயன்படுத்தப்படும் பிரிவு 99 ஐப் உபயோகப்படுத்தினார்.

இதன்படி, காஸாவில் மனிதாபிமான அமைப்பின் சரிவு மற்றும் “மனிதாபிமான பேரழிவை” தடுக்க பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 97 க்கும் மேற்பட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இந்நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இதுவரை 17,500 பேர் உயிரிழந்துள்ளனர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேலும், இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் பெல்ஜியம், ஸ்லோவேனியா, ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, போலந்து மற்றும் போர்த்துக்கல் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...