tamilnif 4 scaled
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய திட்டம்

Share

போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய திட்டம்

கைக்கடிகாரங்களில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து கொண்டு செல்லும் போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய முறை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும், இவ்வாறு போதைப்பொருளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்த்துள்ளதாகவும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகஹஹேன – ஒலுபொடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் போது போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்லும் முறையினை வெளிப்படுத்தியதாகவும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையதிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் 33 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகத்திற்கு இடமின்றி பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் பொதிகளை விநியோகித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...