வீரகெட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவனின் தந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Leave a comment