இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்துள்ளனர்.
போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புக்களை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் தலைமையிலான குழுவின் இத்தாலி விஜயம் அமைந்திருந்தது.
குணமடைவதற்கான தருணம், கலாசாரங்களுக்கு இடையில் ஒற்றுமை, மதங்களுக்கு இடையில் புரிந்துணர்வு எனும் தொனிப்பொருளில் G-20 சர்வமத மாநாடு இம்முறை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment