rtjy 202 scaled
இலங்கைசெய்திகள்

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை நிறுத்தம்

Share

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை நிறுத்தம்

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill Double Capsule) மற்றும் ஜோன் பிளேயர் கோல்ட் ப்ரோ கூல் (John Player Gold Pro Cool) ஆகிய சிகரெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், குறித்த சிகரெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிகரெட்டுகளை காட்சிப்படுத்தியிருந்தால்,அவற்றை அகற்றுமாறும் இலங்கை புகையிலை நிறுவனம், சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி சுவையூட்டும் புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பாக புகையிலை தொடர்பான தேசிய அமைப்பான நாட்டா(NATA) அமைப்பு தொடுத்திருந்த வழக்குகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம், தனது தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த தீர்ப்பு வாய்மொழியாக வழங்கப்பட்டதாகவும், அது தீர்ப்புக்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி இது தொடர்பில் நீதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...