4 10 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

Share

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

இஸ்ரேல் அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு அங்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அல்ஸிபா மருத்துவமனையில் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் படங்களை வெளியிட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டவேளை எந்த ஊடகமும் அங்கு காணப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆயுதங்களை கொண்டுவந்து அவற்றை மருத்துவமனையில் வைத்துவிட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் என்பதை நிராகரிக்க முடியாது என ஹமாஸின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கு அழுத்தம் கொடுத்து  காசாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவீச்சுகள்ள முற்றுகை தாக்குதல் போன்றவற்றால் காசாவில் 25 மருத்துவமனைகள் செயல் இழந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்தான் மருத்துவமனைகளுக்குள் இருந்து செயற்படவில்லை என தெரிவித்துள்ளது.

இரண்டுதரப்பு தெரிவிப்பதையும்உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவிக்கின்றது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...