Nervelliw 777
இலங்கைசெய்திகள்

நீர்வேலி சந்திக்கருகில் கோர விபத்து – இளைஞன் பலி!

Share

யாழ். பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கருகில் உள்ள ஆலயம் முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி பகுதியைச் சேர்ந்த டிலக்சன் (வயது–24) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

இளைஞன் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டி காணப்பட்ட இரும்புக் கம்பி நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளதால் படுகாயமடைந்த இளைஞன் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...