Nervelliw 777
இலங்கைசெய்திகள்

நீர்வேலி சந்திக்கருகில் கோர விபத்து – இளைஞன் பலி!

Share

யாழ். பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கருகில் உள்ள ஆலயம் முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி பகுதியைச் சேர்ந்த டிலக்சன் (வயது–24) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

இளைஞன் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டி காணப்பட்ட இரும்புக் கம்பி நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளதால் படுகாயமடைந்த இளைஞன் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...