இலங்கைசெய்திகள்

ஈழத்தின் பிரபல மிருதங்க கலைஞர் மறைவு!

ddd
Share

ஈழத்தின் பிரபல மிருதங்க, தபேலா வாத்திய கலைஞர் சதா வேல்மாறன் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஒலிப்பதிவாகிய அதிகமான பாடல்கள் மற்றும் பெருமளவான பக்திப் பாடல்கள் ஆகியவற்றுக்கு அவரது அணி இசையமைத்துள்ளது.

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இசையரங்குகளையும் ஆலய விழாக்களையும் அலங்கரித்த கலைஞனாக சதா வேல்மாறன் விளங்குகிறார்.

நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய இவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவருமாவார்.

அவரின் திடீர் இழப்பு தொடர்பில் சக கலைஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்தோர் இவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....