4 18 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய படையினர் மீது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையால் தாக்குதல்

Share

இஸ்ரேலிய படையினர் மீது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையால் தாக்குதல்

காசாவில் முன்னோக்கி நகரமுயலும் இஸ்ரேலிய படையினர் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயலும் இஸ்ரேலிய படையினர் மீது இயந்திரதுப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹமாசின் ஆயுதப்பிரிவு தெரிவித்துள்ளது.

அல்யாசின் 105 ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாகவும் அறிவித்துள்ளது. அல்யாசின் என்பது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் ஆகும்.

காசாவின் வடமேற்கு பகுதியில் இஸ்ரேலின் புல்டோசர்களையும் டாங்கிகளையும் ஏவுகணைகளை பயன்படுத்தி இலக்குவைத்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை இதனை உறுதி செய்ய முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேல் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

எனினும் பணயக்கைதிகள் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக இஸ்ரேலிய படையினர் மிகவும் மெதுவாகவே நகர்கின்றதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...