kamini scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்!

Share

நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்!

நாட்டில் எதிர்வரும் மாதத்தின் பின்னர் மின் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவிக்கையில்,

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் மின்கட்டணங்கள் செலுத்தவில்லை. இந்த நிலையில் இதுவரை 44 பில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் 2 அல்லது 3 மாதங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடியை மின்சார சபை எதிர்கொள்ளும்.

இதனால் மின் வழங்கலில் தடை ஏற்படும். எனினும் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி மின் தடை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது.

மக்கள் இந்த நிலையை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...