rtjy 262 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் தாக்கப்பட்ட இலங்கையர்

Share

ஐரோப்பிய நாடொன்றில் தாக்கப்பட்ட இலங்கையர்

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காண்டிச்சி என்ற பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இத்தாலியில் வீட்டுப் பணியாளராக செயற்பட்டு வருகின்றார்.

பணிக்கு செல்லும் போது அவரது வீட்டின் முன்னால் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு பெறுமதியான ஐபோன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அரை மயக்கத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசியை திருடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையன் கையடக்கத் தொலைபேசியை திருடிய பின்னரும் கீழே விழுந்த இலங்கை நபரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவராலேயே குறித்த இலங்கையர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...