உலகம்
பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்ட கட்டுப்பாடு அமுல்!
பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்ட கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, பிரித்தானிய வீட்டு உரிமையாளர்கள், அல்லது தங்கும் விடுதியை பயன்படுத்தும் நபர்கள் தாங்கள் தங்கும் எந்த அறையிலும் கார்பன் மோனாக்சைடு அலாரத்தை நிறுவ வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் அல்லது அவர்கள் சார்பாக செயல்படும் முகவர்கள், குத்தகைதாரர் அளித்த புகாரைத் தொடர்ந்து நியாயமான முறையில் நடைமுறைக்கு வரக்கூடிய எந்த அலாரத்தையும் சரி செய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த புதிய சட்டம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.
You must be logged in to post a comment Login