தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அல்மேரியாவில் உள்ள லொஸ் கலர்டோஸ் சுற்றியுள்ள காடுகளுக்குள் இந்தத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.
அத்துடன், இந்த கோடைகாலத்தில் தெற்கு ஐரோப்பா முழுவதும் சுமார் 40 செல்லியஸ் வரை வெப்ப அலை நீடிப்பதால் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ், போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர்களில் 4 பேர் பிரித்தானிய பிரஜைகள் என்பதும், மின் கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்ததே இந்த தீ விபத்துக்கான காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.