huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

Share

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, ஏடன் வளைகுடாவில் தங்கள் பயணப் பாதையை மாற்றி தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆசியாவில் இருந்து வெறுமனே திரும்பிய இந்த தாங்கிகள், பப் எல்-மந்தேப் நீரிணை வழியாகச் செங்கடலைக் கடப்பதற்குப் பதிலாக, தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளதாக எல்.எஸ்.இ.ஜி மற்றும் மரைன் டிராபிக் ஏ.ஐ.எஸ் (AIS) கப்பல் கண்காணிப்புத் தகவல்கள் கூறியுள்ளன.

யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர், சவூதி அரேபியாவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
சவூதி கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் மீதான முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹூதி இயக்கம் கூறியுள்ளது.

இதனால் இந்தப் பிராந்தியத்திலான புதிய பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Bird flu
உலகம்

அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்.

  தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் கடற்கரை பகுதிக்கு அருகில் முதன்முறையாக 50க்கும் மேற்பட்ட கடற்பறவைகள் உயிரிழந்ததை...

Curfew in Sri Lanka L
உலகம்

ஊரடங்கு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக, மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மூன்று...

donalt
உலகம்

ஈரான் மீதான தாக்குதல் – அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான...

images 13
உலகம்

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோரில் 67 பேர் பலி.

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்படி, சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட...