நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் மாயம்.

Avalanche Pakistan Trekking Area

பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான ‘பிராட் பீக்’ பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 4 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரபல நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான “14 Peaks: Nothing Is Impossible” மூலம் உலகப் புகழ்பெற்ற 43 வயதான நிர்மல் புர்ஜா, உலகின் மிக உயரமான 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் ஏறி உலக சாதனை படைத்தவர் ஆவார்.

8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக் மலையில் சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு காணாமல் போன 10 பேரில் நேபாளம், பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

தற்போது, பாகிஸ்தான் இராணுவத்தின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறப்புத் தேடுதல் குழுவினர் கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பில் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்களில் இருவரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்மல் புர்ஜா உட்பட மாயமான எஞ்சிய 6 வீரர்களை மீட்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Exit mobile version