மீண்டும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளமையால், உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருகின்றன.
அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 78.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், நேற்று (08) நிலவிய விலையின் ஒப்பீட்டளவில் சுமார் 2.50 அமெரிக்க டொலர் உயர்வடைந்துள்ளது.
அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 74.20 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது நேற்றைய நாளினை காட்டிலும் சுமார் 2 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுமேயானால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் மேலும் விலை உயர்வு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகின்றது.