24 66e50f41a1610 1
ஏனையவை

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் தாமதம்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

Share

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தின் தாமதம்.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு திரைப்படமாகவே இருக்கும். அத்துடன் வெற்றித்திரைப்படமாகவும் அமையும்.

அந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு, GOAT படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

2018 – ம் ஆண்டு டி.சிவா தயாரிப்பில் பார்ட்டி என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஆனால், சில காரணங்களால் இந்த படம் வெளியிடாமல் இருந்தது. தற்போது, இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ஃபிஜி-யில் இருந்து வரவேண்டிய சான்றிதழ் தாமதத்தினால் இந்தப் படம் வெளியீடு தடைப்பட்டது. அங்கு தற்போது வேறொரு அரசாங்கம் பதவியேற்றதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை விரைவில் திருப்பித் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சான்றிதழைப் பெற்று படத்தை டிசம்பரில் வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் டி.சிவா தெரிவித்துள்ளார்.

பார்ட்டி படத்துக்காக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அவர்கள் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...