24 66496159b71d0
ஏனையவை

ரஷ்ய – உக்ரைன் போர் முனை: பயங்கரமான அனுபவங்களை வெளிப்படுத்திய இலங்கையர்கள்

Share

ரஷ்ய – உக்ரைன் போர் முனை: பயங்கரமான அனுபவங்களை வெளிப்படுத்திய இலங்கையர்கள்

ரஷ்ய – உக்ரைன் போர் முனைகளுக்கு சட்டவிரோதமாகச் சென்று, பலத்த காயமடைந்து மீண்டும் இந்த நாட்டிற்கு தப்பிச்சென்ற பல ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தங்களின் பயங்கரமான மற்றும் விரும்பத்தகாத அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிக சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்று தருவதாக கூறி நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதிலும் எதனையும் முறையாக பெற்றுக்கொடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொமாண்டோ படைப்பிரிவில் 22 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்று, அந்நாட்டு கூலிப்படையில் ரஷ்யா சென்று இணைந்து இலங்கை திரும்பிய மொனராகலை – தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த லலித் சாந்த, தனது அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

“சுமார் 16 பேர் வெவ்வேறு இடங்களில் முன்வரிசையில் அவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் தாக்குதல் நடந்தது, தோள்பட்டை, முழங்கால், உள்ளங்கால் என பல இடங்களில் அடிபட்டு, சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காலை இழுத்துச்சென்றேன். ஒரு தொழில்நுட்ப போர் நடக்கிறது. அதை சமாளிப்பது கடினம். அவர்கள் கூடாரத்தில் வாழ்வது மிகவும் கடினம்.

அத்துடன் தெனிப்பிட்டிய, வெலிகம பகுதியைச் சேர்ந்த சந்தன பண்டார என்பவர் ரஷ்ய போர் முனையில் காயமடைந்து பல இன்னல்களுக்குப் பின்னர் மீண்டும் இந்நாட்டிற்கு வந்துள்ளார்.

“போருக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியதால் பயிற்சிப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அந்தப் பள்ளியில் சுமார் 150 முதல் 200 வரையிலான இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். போதிய ஆயுதங்களைக் கொடுத்தார்கள். ஆனால் எங்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...