24 66496159b71d0
ஏனையவை

ரஷ்ய – உக்ரைன் போர் முனை: பயங்கரமான அனுபவங்களை வெளிப்படுத்திய இலங்கையர்கள்

Share

ரஷ்ய – உக்ரைன் போர் முனை: பயங்கரமான அனுபவங்களை வெளிப்படுத்திய இலங்கையர்கள்

ரஷ்ய – உக்ரைன் போர் முனைகளுக்கு சட்டவிரோதமாகச் சென்று, பலத்த காயமடைந்து மீண்டும் இந்த நாட்டிற்கு தப்பிச்சென்ற பல ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தங்களின் பயங்கரமான மற்றும் விரும்பத்தகாத அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிக சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்று தருவதாக கூறி நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதிலும் எதனையும் முறையாக பெற்றுக்கொடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொமாண்டோ படைப்பிரிவில் 22 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்று, அந்நாட்டு கூலிப்படையில் ரஷ்யா சென்று இணைந்து இலங்கை திரும்பிய மொனராகலை – தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த லலித் சாந்த, தனது அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

“சுமார் 16 பேர் வெவ்வேறு இடங்களில் முன்வரிசையில் அவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் தாக்குதல் நடந்தது, தோள்பட்டை, முழங்கால், உள்ளங்கால் என பல இடங்களில் அடிபட்டு, சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காலை இழுத்துச்சென்றேன். ஒரு தொழில்நுட்ப போர் நடக்கிறது. அதை சமாளிப்பது கடினம். அவர்கள் கூடாரத்தில் வாழ்வது மிகவும் கடினம்.

அத்துடன் தெனிப்பிட்டிய, வெலிகம பகுதியைச் சேர்ந்த சந்தன பண்டார என்பவர் ரஷ்ய போர் முனையில் காயமடைந்து பல இன்னல்களுக்குப் பின்னர் மீண்டும் இந்நாட்டிற்கு வந்துள்ளார்.

“போருக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியதால் பயிற்சிப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அந்தப் பள்ளியில் சுமார் 150 முதல் 200 வரையிலான இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். போதிய ஆயுதங்களைக் கொடுத்தார்கள். ஆனால் எங்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...