25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் முறைகேடான வழிகளில் சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024ம் ஆண்டின் டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் தினத்தை முன்னிட்டு 332 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்திருந்தார்.

எனினும், அன்றையதினம் 389 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் 57 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அதே போன்று கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செயற்பாட்டின் போது 11 கைதிகள் மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்

அத்துடன், தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வெசாக் தின பொதுமன்னிப்பின் கீழ் 388 கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

எனினும், அதரற்கு மேலதிகமாக 26 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...