ஏனையவை

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல

நாட்டில் தினசரி நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்றுமுதல் (14.02.2025) நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்றும் மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுரைச்சோலையின் (Lakvijaya Power Plant) நிலைமையைக் கருத்தில் கொண்டு, மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா, இல்லையா என்கின்ற முடிவு எடுக்கப்படும் என நேற்றைய தினம் (13.02.2025) அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.02.2025), நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.

இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இருப்பினும், 12ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் மின்வெட்டு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்று முதல் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...

MediaFile 1 2
ஏனையவை

யாழ் – பண்ணைக் கடலில் சோகம்: நீராடச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 7) மாலை நீராடச் சென்ற கொக்குவில்...

DSC 4424
ஏனையவை

சிவனொளிபாதமலைக்கு ஹட்டன் வழியாகப் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சீரற்ற காலநிலை காரணமாக, சிவனொளிபாத மலைக்கு (Sri Pada/Adam’s Peak) செல்வதற்கான ஹட்டன் அணுகல் வீதியிலுள்ள...