8 24
ஏனையவை

அதிகரிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களின் கைது! ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

Share

அதிகரிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களின் கைது! ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒருமுறை கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், 66 இந்திய கடற்றொழில் படகுகளையும் 497 இந்தியர்களையும் இலங்கை நாட்டின் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை இந்தியா-இலங்கை உறவுகளில் ஒரு கரும்புள்ளியாக உள்ளது. இந்தநிலையில், இலங்கை கடற்படையினரின் இந்த கைதுகள், தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களுக்கு பெரும் துயரத்தையும் ஏற்படுத்துகின்றன என்று தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...