1 8 scaled
ஏனையவை

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை கைது செய்ய வேண்டும் – நடிகர் சேரன்

Share

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை கைது செய்ய வேண்டும் – நடிகர் சேரன்

அதிமுக கட்சியின் சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் பெரும் புயலை கிளப்பிய சம்பவம் ஆகும். தற்போது இந்த சம்பவம் தொடர்பில் நடிகை திரிஷாவை இணைத்து அதிமுக முன்னாள் பிரமுகர் பேட்டி அளித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்து இருப்பதாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் ஏ.வி.ராஜு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ரகசியங்களை அடுக்கினார்.

அவர் எம்.எல்.ஏ. வெங்கடாலசம் குறித்து பேசியபோது நடிகை திரிஷாவை அவர் கேட்டதாகவும், அதற்கு நடிகர் கருணாஸ் ஏற்பாடு செய்ததாகவும் பகிரங்கமாக கூறினார்.

அத்துடன் 25 லட்சம் அதற்காக செலவானதாகவும், எடப்பாடி பழனிசாமி தான இதற்கெல்லாம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து நடிகர் சேரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் ஏ.வி.ராஜுவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...