images 3 3
ஏனையவை

மீண்டும் ஒரு சிக்கலில் ஷேக் ஹசீனா: ஜனவரி 21-ல் தேசத் துரோக வழக்கின் குற்றச்சாட்டுகள் பதிவு!

Share

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள புதிய தேசத் துரோக வழக்கில், வரும் ஜனவரி 21-ஆம் திகதி முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் விளைவாகப் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். மாணவர் போராட்ட வன்முறைகள் தொடர்பான வழக்கில் அவருக்கு ஏற்கனவே சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.

2024 டிசம்பரில், ‘ஜாய் பங்களா பிரிகேட்’ என்ற அமைப்பு நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் ஹசீனா பங்கேற்றுள்ளார்.

முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகவும், உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டதாகவும் அவர் மீது புதிய வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தத் தேசத் துரோக வழக்கிலேயே வரும் 21-ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகள் தீவிரமடையவுள்ளன.

பங்களாதேஷில் இருந்து தப்பியோடிய பின்னர் ஷேக் ஹசீனா மீது அடுத்தடுத்துத் தொடரப்படும் இந்த வழக்குகள், அவரை மீண்டும் பங்களாதேஷிற்கு நாடு கடத்துவதற்கான அழுத்தங்களை அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...