22 8
ஏனையவை

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

Share

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் ராவிட், ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். அணிகள் ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தன. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ராகுல் ராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத காசோலையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ராகுல் ராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் ராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் அந்த நன்கொடையை நிராகரித்துள்ளார்.

ராகுல் ராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...