22 7
ஏனையவை

மட்டக்களப்பு – கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது

Share

மட்டக்களப்பு – கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது

விபத்து ஒன்று தொடர்பில் கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செங்கலடி கரடியனாறு பிரதான வீதி காயங்குடா பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி செலுத்திய ஜீப்வண்டி நேற்றையதினம் மோதியுள்ள நிலையில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன இடமாற்றம் பெற்றுச் செல்கின்றதையடுத்து அவருக்கு இரவு போசனம் வழங்கி பிரியாவிடை செய்யும் நிகழ்வு பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

அதில் மாவட்டதிலுள்ள காவல்நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரவு போசன நிகழவுக்கு கரடியனாறு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி அவருக்கு சொந்தமான ஜீப்வண்டியில் தனியாக சென்று இரவு 10.00 மணியளவில் மீண்டும் கரடியனாறு காவல்நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காயங்குடா பகுதியில் பிரதான வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார்.

இதில் பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற காவல்துறை பொறுப்பதிகாரியும் செங்கலடி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு இன்று (8) காலை சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

இதன்படி, குறித்த விபத்து தொடர்பாக கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்து அவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...