law 1
ஏனையவை

பருத்தித்துறையில் லஞ்ச் சீற் பாவனைக்குத் தடை: மீறினால் நேரடி நீதிமன்ற நடவடிக்கை!

Share

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்ச் சீற் (Lunch Sheet) பயன்படுத்துவதற்கான தடை நேற்று (ஜனவரி 01) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில், உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளகப் பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் (Packing) என அனைத்துச் செயல்பாடுகளுக்கும் லஞ்ச் சீற் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை: இந்தத் தடையை மீறிச் செயல்படுபவர்கள் மீது எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நேரடியாக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்ற இயற்கையான இலைகள். ஈய காகிதம் (Foil Paper) மற்றும் உணவு பொதியிடலுக்காக அங்கீகரிக்கப்பட்ட தரமான கொள்கலன்கள் மாற்றீடுகளைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது:

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் பருத்தித்துறை நகரசபை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவிற்குச் சமூக ஆர்வலர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...