sun
ஏனையவை

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி சேதம்!!

Share

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில் நிகழும் மாற்றங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள். சூரியனையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். சூரியனில் இருந்து வெளியேறும் காந்த புயல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கிறார்கள். இந்த நிலையில் சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துள்ளதாகவும் அது சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு புயலை போல சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நெருப்பு சூறாவளி சூரியனின் மேற்பரப்பு சுழன்று வருவதாக தெரிவித்தனர். இது எப்படி நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி பதிவு செய்துள்ளது. அந்த ஆராய்ச்சியை விண்வெளி ஆராய்ச்சியாள் அர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், `துருவ சூழலை பற்றி பேச்சுக்கள் நடந்து வருகிறது. சூரியனின் வடக்கு பக்கத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய பகுதி உடைந்துவிட்டது. அது சூரியனின் வட துருவத்தில் சுற்றி வருகிறது. அதன் தாக்கத்தை பற்றி ஆராய்ந்து வருகிறோம்.

சூரியனில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுவதுண்டு. இந்த சூரிய புயல்களால் தகவல் தொழில் நுட்ப தொடர்புகள் பாதிக்கப்படும். ஆனால் தற்போது சூரியனின் வடக்கு பகுதியில் ஒரு துண்டே உடைந்து பெரிய அளவில் நெருப்பு சூறாவளி சுற்றி வருவதால் அது பூமிக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக சூரியனை ஆய்வு செய்து வரும் அமெரிக்க தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஸ்காட் மெக்கிண்டோவ் கூறும்போது, `சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடைந்தது போன்ற ஒரு சூழலை இதுவரை நான் பார்த்ததில்லை.’ என்றார்

#technology

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...