அமெரிக்கா செல்கிறார் மோடி!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் செல்லவுள்ளார்.
இந்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கவுள்ளன.
இந்த மாநாட்டில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளை பாதுகாப்பது, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பூசிகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படவுள்ளது.
முக்கியமாக ஆப்கான் விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ளது என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் 23 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment