ஏனையவை

ரணில் அரசின் சட்டத்திற்கு முரணான செயற்பாடு அம்பலம்

Anura Kumara Dissanayake 4
Share

ரணில் அரசின் சட்டத்திற்கு முரணான செயற்பாடு அம்பலம்

கடந்த ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)தலைமையிலான அரசாங்கம் அனுமதியின்றி சட்டத்திற்கு முரணான வகையில் நுகர்வோர் விவகாரசபைக்கு விசாரணைப்பிரிவின்தலைவர் ஒருவரை நியமித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, குறித்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விசாரணைப்பிரிவிற்கு தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு நிதியமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் அவற்றின் அனுமதி பெறப்படாமலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு நியமிக்கப்பட்ட ஊடக அதிகாரியும் தற்போதைய தலைவரால் நீக்கப்பட்டுள்ளார்.

நியமனம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் தற்போதைய தலைவர், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கேட்டபோது, இந்த நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் வர்த்தக அமைச்சர் தன்னிச்சையாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளமை இதன்மூலம் தெரியவந்துள்ளது.

Share
Related Articles
17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...