1667894903 protest 1 1
ஏனையவை

இந்திய மீனவர்கள் கைது! – அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Share

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்வதும் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடிப்பதும், தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது, இந்நிலையில் கடந்த மாதம் 27 மற்றும் இந்த மாதம் 5 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களையும் படகையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் இருக்கும் 22 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், அதேபோல 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வேண்டும், பாரம்பரிய இடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் விதமாகவும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று தங்கச்சிமடம் வலசை தெருவில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 15,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...