முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
ஏனையவை

அடுத்த ஆண்டு சிவகார்த்திகேயன் கைவசம் இத்தனை படங்களா?

Share

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கான ஒரு இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தக்கவைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த ஆண்டு கைவசம் உள்ள திரைப்படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பெரியளவில் காணப்படுகிறது.

இப்படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, இன்று நேற்று நாளை படத்திற்கு பின் இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் அயலான். Alien-யை முக்கிய கதாபாத்திரமாக காட்டப்படவுள்ள அயலான் படத்தை பெரிய பொருட்செலவில் எடுத்துள்ளனர்.

இந்தப்படமும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் முதல்முறையாக இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கி வருகிறார். இப்பொது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படமும் 2022 வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

மேலும் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளார். இப்படமும் 2022 ஆம் ஆண்டு தொடங்கலாம் என கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி தொடங்கும் என்றும் அதன் அறிவிப்பும் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...