24 6635844253c07
இலங்கைஏனையவைசெய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம்: கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாமென எச்சரிக்கை

Share

ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம்: கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாமென எச்சரிக்கை

ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம் தருவதாக மோசடி செய்யும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களிடம் இலங்கையர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிந்து வெளியேறி, மிகவும் கஷ்டங்களை அனுபவித்த, நாட்டின் ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மற்றுமொரு குழுவினர் தமது கசப்பான அனுபவங்களை நேற்று (03) வெளிப்படுத்தியுள்ளனர்.

மனித கடத்தலில் சிக்கிய இந்த குழுவினர் தாம் அனுபவித்த துயரங்களை வெளிப்படுத்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்து வாக்னர் கூலிப்படையில் பணிபுரிய அந்நாட்டுக்கு சென்றபோது வாக்னர் கூலிப்படையின் முன் வரிசையில் பணியாற்றவே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ரஷ்யாவில் அதிக சம்பளம், நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் தருவதாக அழைத்துசென்றவர்கள் கூறியும், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பல மாதங்களாக சம்பளம் கூட தரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அந்நாட்டில் போர் முனையில் இருக்கும் இலங்கை இராணுவ வீரர்கள் அந்நாட்டு போர் முனையில் இருந்து பல காட்சிகளை தொடர்ச்சியாக எங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ஏமாற்றிய இந்த மோசடியில் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர் உட்பட பலர் செயற்படுகின்றனர் என்றும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...