9 32
ஏனையவை

முதலாவது நாடாளுமன்ற அமர்வு குறித்து வெளியான தகவல்

Share

முதலாவது நாடாளுமன்ற அமர்வு குறித்து வெளியான தகவல்

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நாளை மறுதினம் (21) முற்பகல் 10 மணிக்கு முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து, முற்பகல் 11.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி முன்வைப்பார் என நாடாளுமன்ற செயலாளர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...