24 665e0aff763f6
ஏனையவை

புகழின் உச்சிக்கு சென்றதும் திமிரா? கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணும் லிங்குசாமி! இழுத்தடிக்கும் சூரி

Share

புகழின் உச்சிக்கு சென்றதும் திமிரா? கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணும் லிங்குசாமி! இழுத்தடிக்கும் சூரி

தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சீரியல் நடிகராக இருந்து அதற்கு பின்பு காமெடி நடிகராக, தற்போது தனது விடாமுயற்சியின் காரணமாக கதையின் நாயகனாக உருமாறி உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலைப் படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த படத்தில் தனது உடலை வருத்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சூரி. அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக அந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நாயனாக நடிக்க சூரிக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சூரி. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதிலும் நடிகர் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது சூரியை வைத்து படமெடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் லிங்குசாமிக்கு கால்சீட் கொடுக்க சூரி இழுத்தடித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு காரணம் அவர் சூரியை வைத்து காமெடி படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். மீண்டும் காமெடி டிராக்டில் போக வேண்டாம் என சூரி யோசிப்பதனால் அவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...