tamilnih 15 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

தங்க கட்டிகளுக்கு பதிலாக Gold Beansகளை வாங்கிக் குவிக்கும் சீனத்து இளைஞர்கள்

Share

தங்க கட்டிகளுக்கு பதிலாக Gold Beansகளை வாங்கிக் குவிக்கும் சீனத்து இளைஞர்கள்

தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டத்துவங்கியிருக்கும் சீனத்து இளைஞர்கள், தற்போது பாதுகாப்பான மிதலீடு என Gold Beansகளை வாங்கிக் குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குண்டுமணி போன்ற இந்த Gold Beans தோராயமாக ஒரு கிராம் எடையுடன் 400 முதல் 600 RMB வரை (இந்திய மதிப்பில் ரூ 5,209 முதல் 7,814) இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இந்த Gold Beans மோகம் தற்போது சீனத்து இளம் தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளதாகவும் மாதம் ஒரு பீன்ஸ் வாங்கும் அளவுக்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக சீனாவில் நடுத்தர வயது மற்றும் முதியவர்களே பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் தங்கத்தின் மீதான முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன்மையான காரணமாக கூறப்படுவது வாங்கும் திறனுக்கேற்ற விலை. வெறும் 1 கிராம் கொண்ட இந்த Gold Beans மீது இளம் தலைமுறையினர் மட்டுமே மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும், இளம் தம்பதிகள் அல்லது நடுத்தர வயது மக்கள் 10 கிராம் அல்லது 50 கிராம் தங்க கட்டிகள் மீதே ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் 1990 காலகட்டத்திற்கு பிறகு பிறந்த மக்களே பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். 18 முதல் 40 வயதுடையவர்களே 70 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

மேலும், 2023 டிசம்பரில் தங்கம், வெள்ளி மற்றும் ஆபரணங்களின் விற்பனை ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. இது 2022 டிசம்பர் மாதத்துடன்டன் ஒப்பிடுகையில் 29.4 சதவீதம் அதிகம் என்றே தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...