India Hindu Temple 28921
ஏனையவை

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

Share

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பத்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் AI சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

RAF, ATS, மத்திய படைகள் மற்றும் உ.பி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல மொழித் திறன் கொண்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டத்தை சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிகின்றனர். தரம்பத், ரம்பத் ஹனுமான் கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் தெருக்களில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு படை (ATS) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத பூகம்பங்களைச் சமாளிக்க பல தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF), SDRF பயன்படுத்தப்படுகின்றன.

உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) பணியாளர்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். இரண்டு NSG குழுக்களின் ஸ்னைப்பர்கள் கூரைகள் மற்றும் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பல சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிப்போக்கர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அயோத்தி மாவட்டம் சிவப்பு மற்றும் மஞ்சள் மண்டலத்தில் உள்ளது. சரயு நதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான போக்குவரத்தை திசை திருப்பவும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...