ஏனையவை

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

Share
India Hindu Temple 28921
Share

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பத்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் AI சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

RAF, ATS, மத்திய படைகள் மற்றும் உ.பி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல மொழித் திறன் கொண்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டத்தை சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிகின்றனர். தரம்பத், ரம்பத் ஹனுமான் கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் தெருக்களில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு படை (ATS) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத பூகம்பங்களைச் சமாளிக்க பல தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF), SDRF பயன்படுத்தப்படுகின்றன.

உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) பணியாளர்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். இரண்டு NSG குழுக்களின் ஸ்னைப்பர்கள் கூரைகள் மற்றும் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பல சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிப்போக்கர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அயோத்தி மாவட்டம் சிவப்பு மற்றும் மஞ்சள் மண்டலத்தில் உள்ளது. சரயு நதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான போக்குவரத்தை திசை திருப்பவும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...