India Hindu Temple 28921
ஏனையவை

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

Share

அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: 10,000 CCTV கமெராக்கள்., AI ட்ரோன்கள், பாதுகாப்பு படைகள் கண்காணிப்பு

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பத்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் AI சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

RAF, ATS, மத்திய படைகள் மற்றும் உ.பி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல மொழித் திறன் கொண்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டத்தை சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிகின்றனர். தரம்பத், ரம்பத் ஹனுமான் கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் தெருக்களில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு படை (ATS) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத பூகம்பங்களைச் சமாளிக்க பல தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF), SDRF பயன்படுத்தப்படுகின்றன.

உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) பணியாளர்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். இரண்டு NSG குழுக்களின் ஸ்னைப்பர்கள் கூரைகள் மற்றும் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பல சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிப்போக்கர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அயோத்தி மாவட்டம் சிவப்பு மற்றும் மஞ்சள் மண்டலத்தில் உள்ளது. சரயு நதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான போக்குவரத்தை திசை திருப்பவும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Share
தொடர்புடையது
articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...