24 65ae4b309fd5b
உலகம்செய்திகள்

உதயநிதியை ஹிந்தியில் விமர்சித்த பாஜக.., ஒற்றை புகைப்படம் மூலம் சாதுர்யமாக பதில்

Share

உதயநிதியை ஹிந்தியில் விமர்சித்த பாஜக.., ஒற்றை புகைப்படம் மூலம் சாதுர்யமாக பதில்

பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஹிந்தி மொழியில் விமர்சித்ததற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலின் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த விழா குறித்து முன்னதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ராமர் கோயில் விழா திறப்புக்கு நாங்கள் எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்து விட்டு கோயிலை கட்டியதற்கு திமுகவுக்கு உடன்பாடில்லை” என்று கூறியிருந்தார்.

அயோத்தியில் வரலாறு காணாத கோலாகலம்.., ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அயோத்தியில் வரலாறு காணாத கோலாகலம்.., ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அதுமட்டுமல்லாமல், சனாதனத்தை பற்றி உதயநிதி பேசிய கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் “இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள், அவர்கள் ராமர் கோவிலை எதிர்த்து சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்” என்று ஹிந்தி மொழியில் பதிவிட்டிருந்தது.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....