1 55
ஏனையவை

அமைச்சரவையில் கிழக்குமாகாணத்தை புறக்கணித்த அநுர அரசு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்(anura kumara dissanayake) இன்று (18) நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணம்(eastern province) புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அமைச்சர் பதவிகளை மேல் மாகாணம் கொண்டுள்ளது. இதன்படி, எண்ணிக்கை ஆறு எனவும், தென் வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு தலா ஒரு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரன் நீண்டகாலமாக வடமாகாணத்திற்கான கட்சியை ஒழுங்கமைத்து வருவதால் இந்த நியமனம் வடக்கிற்கான நியமனமாகவே கருதமுடியும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவைக்கு அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் பிரதி அமைச்சர்களை நியமித்து அந்த வெற்றிடத்தை நிரப்பப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த அமைச்சரவையில் குறிப்பிடத்தகுந்த விடயமாக , தமிழ்பிரதிநிதித்துவத்திற்கு, ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டாலும், முஸ்லிம் சமூகத்திற்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...