24 66a7e3b5a3a3a
ஏனையவை

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை

Share

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை

கனடாவில் (Canada) விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பில் கனேடிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கனடாவில் விளையாட்டுத் துப்பாக்கிகளின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தும் போது கனேடிய மக்கள் அச்சம் அடைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், எல்கின் துறைமுகப் பகுதி கரையோரத்தில் இரு நபர்கள் துப்பாக்கிகளுடன் நடமாடுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைத்திருந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அது விளையாட்டுத் துப்பாக்கி என பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், இவ்வாறான விளையாட்டுத் துப்பாக்கிகளையும் உண்மையான துப்பாக்கிகளையும் பிரித்தறிவது கடினமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்வாறு உண்மையான துப்பாக்கிகளைப் போன்ற விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான விளையாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...

10 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வெற்றிடமாகவுள்ள, மூன்று வேலைப் பிரிவுகளுக்கான பதிவு இன்று(27) அதிகார பூர்வமாக ஆரம்பமாகும்...